நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை டத்தோஸ்ரீ சரவணன் தொடக்கி வைத்தார்

சிரம்பான்:

ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தொடக்கி வைத்து சிறப்பித்தார்.

2ஆவது ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டி மலேசியா ஏற்று நடத்துகிறது.

இப்போட்டி இன்றும் நாளையும் சிரம்பான் பண்டார் ஶ்ரீ  செண்டாயான் ஐஆர்சி அரங்கில் நடைபெறுகிறது.

இந்தியாவில் இருந்து 4 அணிகள், சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து தலா 1 அணிகளும் கலந்துக்  கொண்டுள்ளன.

மலேசியாவை பிரதிநிதித்து 2020 கிளப் என மொத்தம் 7 அணிகள் கலந்துக் கொண்டுள்ளன என்று அக்கிளப்பின் தலைவர் ஏஎஸ்பி ராஜன் கூறினார்.

இப்போட்டி வெற்றிகரமாக நடைபெற பல நிறுவங்கள், நல்லுள்ளங்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளன.

இவ்வேளையில் ஆதரவு தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றி என்று ராஜன் கூறினார்.

முன்னதாக இந்த கால்பந்துப் போட்டியை மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இன்ரு தொடக்கி வைத்தார்.

அதே வேளையில் போட்டியை ஏற்பாடு செய்த 2020 கால்பந்து கிளப்பிற்கும் போட்டியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களுக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset