செய்திகள் மலேசியா
மேற்கு ஆசியாவில் அரசியல் நெருக்கடி; மலேசியா நிலைமையைக் கண்காணித்து வருகிறது
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் நிகழ்ந்து வரும் போர் காரணமாக மலேசியா நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) தெரிவித்துள்ளது.
இதனால் அனைத்து தரப்பும் இந்த விவகாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து தரப்பினரையும் அமைச்சு கேட்டுக்கொள்கிறது.
மேற்கு ஆசியா அல்லது அதன் சுற்று வட்டார நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் அண்மைய நிலவரங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுமாறு விஸ்மா புத்ரா நேற்று வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
உதவி தேவைப்படும் மலேசியர்கள் தெஹ்ரானில் உள்ள மலேசியா உயர் ஆணைய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், மின்னஞ்சல் வாயிலாகவும் உதவிகளைக் கோரலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இஸ்ரேல்- ஈரான் ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் கடுமையான சண்டை மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm