நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் தீய சக்திகளைப் புறக்கணியுங்கள்: ஹன்னா இயோ

கோல குபு பாரு: 

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சில தரப்பினர் நம்பிக்கை கூட்டணி களமிறக்கும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க போவதில்லை என்று தீர்க்கமாக அறிவித்துள்ளனர். 

இந்த விவகாரத்தில் ஜனநாயக செயல் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் பொது மக்கள் இந்த மாதிரியான தீய சக்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார். 

இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது என்பது நாட்டு மக்களிடையே ஆரோக்கியமான அரசியலைக் காண முடியாமல் போகலாம். இதனால் இவ்வாறான கூற்றுகளுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார் 

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அதன் வேட்பாளரைக் களமிறக்காது என்று தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset