நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோவின் தலைவர் என்ற முறையில் நஜீப்பின் வீட்டுக் காவலை ஜாஹித் ஆதரிக்கிறார்: அன்வார்

கோலாலம்பூர்:

அம்னோவின் தலைவர்  என்ற முறையில் நஜீப்பின் வீட்டுக் காவலை டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி ஆதரிக்கிறார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மன்னிப்பு வாரியத்தின் முடிவில் அரசாங்கம் எந்தவொரு சூழ்நிலையிலும் தலையிடாது.

மேலும் வாரியக் கூட்டத்தின் போது மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவு இறுதியானது.

அதை யாரும் சவால் செய்ய முடியாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அம்னோ தலைவர் என்ற முறையில் ஜாஹித் ஹமிடி இவ்வாறு செயல்படுகிறார்.

மன்னிப்பு வாரியத்தின் சார்பாக தேசிய சட்டத்துறை தலைவர் இந்த விவகாரத்தை பார்த்துக் கொள்வார்.

ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளையும் வினா எழுப்ப முடியாது என்பதே எங்களின் நிலைப்பாடு.

இது குறித்து நான் மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset