நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏ துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபர் மெக்காவிற்கு தப்பியோட திட்டமிட்டிருக்கலாம்: போலீஸ்

கோத்தாபாரு:

கேஎல்ஐஏ துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபர் மெக்காவிற்கு தப்பியோட திட்டமிட்டிருக்கலாம்.

இதனை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவின் இயக்குநர் முகமத் சுஹாய்லி முகமட் ஜைன் கூறினார்.

கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சந்தேக நபர் தற்போது  தடுப்பு காவலில் உள்ளார்.

அவ்வாடவர் கிளந்தான், தாய்லாந்து எல்லை வழியாக மெக்காவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற சாத்தியத்தை தமது தரப்பு நிராகரிக்கவில்லை. 

மேலும் ஹஃபிசுல் ஹவாரி வேறு நாட்டில் பதுங்கிக் கொள்ள நாட்டின் எல்லை வழியாகத் தப்பிச் செல்ல முயன்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட கடப்பிதழ், அந்நிய நாட்டு பணம் உட்பட பல ஆவணங்களை வைத்து இந்த விவகாரத்தை போலீசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

சம்பந்தப்பட்ட ஆடவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்வது உண்மை தான்.

இதனால் அவர் மெக்காவிற்கு தப்பி செல்லும் சாத்தியத்தை போலீஸ் மறுக்கவில்லை என்று முகமத் சுஹாய்லி முகமட் ஜைன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset