செய்திகள் மலேசியா
கேஎல்ஐஏ துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபர் மெக்காவிற்கு தப்பியோட திட்டமிட்டிருக்கலாம்: போலீஸ்
கோத்தாபாரு:
கேஎல்ஐஏ துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபர் மெக்காவிற்கு தப்பியோட திட்டமிட்டிருக்கலாம்.
இதனை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவின் இயக்குநர் முகமத் சுஹாய்லி முகமட் ஜைன் கூறினார்.
கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சந்தேக நபர் தற்போது தடுப்பு காவலில் உள்ளார்.
அவ்வாடவர் கிளந்தான், தாய்லாந்து எல்லை வழியாக மெக்காவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற சாத்தியத்தை தமது தரப்பு நிராகரிக்கவில்லை.
மேலும் ஹஃபிசுல் ஹவாரி வேறு நாட்டில் பதுங்கிக் கொள்ள நாட்டின் எல்லை வழியாகத் தப்பிச் செல்ல முயன்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட கடப்பிதழ், அந்நிய நாட்டு பணம் உட்பட பல ஆவணங்களை வைத்து இந்த விவகாரத்தை போலீசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை.
சம்பந்தப்பட்ட ஆடவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்வது உண்மை தான்.
இதனால் அவர் மெக்காவிற்கு தப்பி செல்லும் சாத்தியத்தை போலீஸ் மறுக்கவில்லை என்று முகமத் சுஹாய்லி முகமட் ஜைன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm