நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரும் நஜிப்பின் மனு: ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரிக்கப்படும்

கோலாலம்பூர்:

1 எம்டிபி வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரும் நஜிப்பின் மனு ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரிக்கப்படும்.

இந்த தேதியை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிர்ணயித்தது.

முன்னாள் பிரதமரான டத்தோஶ்ரீ நஜீப்பின் 1 எம்டிபி வழக்கு விசாரணைக்கு நீதிபதியாக கோலின் லாரன்ஸ் செக்வேரா உள்ளார்.

இந்த நீதிபதியை மாற்ற வேண்டும் என நஜீப்பின் வழக்கறிஞர் குழு மனு தாக்கல் செய்திருந்தது.

நஜீப்பின் இம்மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி இம்மனு விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset