நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிரம்பானில் மீன்கள் இறந்து கிடந்தன: ஆற்றின் நீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது

சிரம்பான்:

சிரம்பானில் மீன்கள் இறந்து கிடந்த ஆற்றின் நீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

இதனை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் உறுதிப்படுத்தினார்.

கடந்த வெள்ளிக்கிழமை சிரம்பானில் உள்ள இயற்கை தரக் கழிவு கிடங்கு ஒன்று எரிந்து சாம்பலானது.

இந்த கிடங்கிற்கு அருகில் உள்ள ஆற்றில் தற்போது மீன்கள் இறந்து கிடந்தது.

மீன்கள் இறந்து கிடந்ததற்கான காரணத்தை அறிய ஆற்றின் நீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை குவாலிட்டி அலாம் மேற்கொண்டு வருகிறது.

அதே வேளையில் இந்த விவகாரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset