நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் உலக அமைதிக்காக சிறப்பு வழிபாடு 

ஈப்போ:

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இங்கு ஜாலான் லங்காட்டில் உள்ள அரச மரத்தடி விநாயகர ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

காலையில் விநாயகருக்கு  அபிஷேக ஆராதனையும்  இரவு 7 சிறப்பு பூஜையும் நடைபெற்றதுடன் அன்னதனமும் வழங்கப்பட்டது.  

இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் கலத்துக் கொண்டனர்.

ஈப்போவில் உள்ள ஆர்எஸ் கிரேன் சர்விஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

நாங்கள் ஆண்டு தோறும்  இவ்விழா சிறப்புடன் நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு உலக மக்கள் அமைதிக்காக நடத்தியதாக அதன் உரிமையாளர் எஸ். மணி கூறினார்.

உலகம் அமைதியாக இருந்தால் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கும்.ஆகவே மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ  அமைதி முக்கியம் என்றார்.

இவ்விழாவில்  தொழிலதிபர் டத்தோ தங்கராஜா, ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset