நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜெஞ்ஜாரோமில் 30 இடங்களில் வியாழக்கிழமை வரை மின் தடை 

கோல லங்காட்:

ஜெஞ்ஜாரோம் நகரில் உள்ள பிரதான விநியோக துணை மின்நிலையத்தில் திட்டமிடப்பட்ட பணிகள் நிறுத்தப்படுகிறது.

இதனால் அம்மாவட்டத்தில் உள்ள 30 இடங்களில் வியாழக்கிழமை வரை மின்தடை ஏற்படும் என்று தெனாகா நேஷனல் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட மின் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறிப்பாக ஜெனரேட்டர் நிறுவும் பணிகளால் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தற்காலிக மின்சாரம் தடைபடும்.

இந்த பணி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

இன்று தொடங்கி வியாழக்கிழமை வரை இந்த மின்தடை இருக்கும் என்று தெனாகா நேஷனல் பெர்ஹாட் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset