நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்கந்தார் முகாம் நீச்சல் குளம் கட்டுவதில் தாமதம் ஏன்?: விளக்கம் கோருகிறார் மாமன்னர்

கோலாலம்பூர்:

இஸ்கந்தார் முகாம் முக்குளிப்பு நீச்சல் குளம் கட்டுமானத்தின் தாமதத்திற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக விளக்க வேன்டும்.

இதற்கான உத்தரவை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பிறப்பித்தார்.

கடந்த 2022 டிசம்பரில் முழுமையாக கட்டி முடிக்கப்பட வேண்டிய குளம் இன்னும் கட்டுமானத்தில் உள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆறு முறை கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கட்டுமான தளத்தில் உள்ள திட்டப் பலகை இடிக்கப்பட்டுள்ளதைக் கண்டேன்.

இது ஏன் இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை ஜொகூர் மாநில பொதுப்பணித் துறையும் மெர்சிங் மாவட்டப் பொறியாளர் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

இது சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset