நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ ரமணன் தலைமையில் சுங்கைபூலோவில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் 

சுங்கைபூலோ:

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் கம்போங் பாரு சுங்கைபூலோவில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துணையமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் என் நிகழ்வுக்கு தலைமையேற்று சிறப்பித்தார்.

ஆலயத்தில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பெரியவர்களுக்கான கோலப் போட்டி உட்பட பல நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டத்தோ ரமணன் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வசதி குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முக்கிய அங்கமாக ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு தனது சம்பளத்திலிருந்து ஒரு தொகையை நிதியாக டத்தோ ரமணன் வழங்கினார்.

இதேபோன்று இந்த தொகுதியில் கிட்டத்தட்ட ஏழு ஆலயங்களுக்கு அவர் நிதி வழங்கினார்.

சித்திரை புத்தாண்டு மக்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற  நோக்கத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதே வேளையில் வசதிக் குறைந்த மக்களுக்கும் இன்றைய நிகழ்வில் உதவிகள் வழங்கப்பட்டது.

வரும் காலங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் பல நிகழ்வுகள் நடத்தப்படும் என்று டத்தோ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset