நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநில தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும்: ஹாஜிஜி

கோத்தா கினபாலு:

மாநில சட்டமன்ற தவணைக் காலம் முடிவடைந்ததும் அடுத்த ஆண்டு சபா தேர்தல் நடைபெறும். மாநில முதல்வர் ஹாஜிஜி நோர் இதனை தெரிவித்துள்ளார்.

சபா மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க மாநில அரசு இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது.

நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன.

குறிப்பாக தண்ணீர் பிரச்சினை போன்ற இந்த நேரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

16ஆவது சபா மாநில தேர்தல் கடந்த 2020 செப்டம்பரில் நடைபெற்றது.

அடுத்த ஆண்டு அக்டோபரில் சபா மாநில சட்டமன்றம் தானாகவே கலைந்துவிடும், அதைத் தொடர்ந்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பகு குறிப்பிட்டத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset