நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீராகவுள்ளது

கோலாலம்பூர்: 

இன்று காலை 8 மணி நிலவரப்படி நாட்டின் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளது.  

ஜாலான் துடா டோல் பிளாசா (வடக்கு), சுங்கை பெசி டோல் பிளாசா (தெற்கு) மற்றும் கோம்பாக் டோல் பிளாசா (கிழக்கு கடற்கரை திசை) ஆகிய இடங்களில் போக்குவரத்து சீராக இப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இருப்பினும், இறுதி நேரத்தில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால், இன்று வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை (KLK), கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை கட்டம் 1 (LPT1), கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 2 (LPT2) மற்றும் மேற்கு கடற்கரை கடற்கரை நெடுஞ்சாலை (WCE) ஆகியவற்றிலும் போக்குவரத்து சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset