நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலிய நபர் மீது வெள்ளிக்கிழமையன்று குற்றஞ்சாட்டப்படும்: ஐஜிபி

கோலாலம்பூர்:

ஆறு துப்பாக்கிகள், 200 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலியர் மீது வெள்ளிக்கிழமை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை தெரிவித்தார்.

அவ்வாடவர் மீது துப்பாக்கிச் சட்டம் 1971 இன் பிரிவு 7 இன் படி குற்றச்சாட்டுகள் விதிக்கப்படும் என்றார்.

முன்னதாக மார்ச் 27 அன்று, கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இஸ்ரேலியர் கைது செய்யப்பட்டார்.

பகைமையின் காரணங்களுக்காக சக நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொல்லப் பயன்படுத்த தயார் செய்யப்பட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset