செய்திகள் மலேசியா
3டி பிரிண்டிங் துறையில் சிறந்த எதிர்காலம்; இந்தியர்கள் பயனடைய வேண்டும்: பிரபாகரன்
பூச்சோங்:
நாட்டில் 3டி பிரிண்டிங் துறையில் உள்ள வாய்ப்புகளை இந்திய சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா சிறப்பு நடவடிக்கை குழு தலைவருமான பிரபாகரன் கூறினார்.
செண்ட்ரி எச்டி நிறுவனத்தின் சார்பில் 50 பேருக்கு 3டி பிரிண்டிங் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
ஜேகே விக்னேஸ்வரன் தலைமையில் மித்ரா ஆதரவில் இப்பயிற்சி 5 நாட்களுக்கு நடைபெற்றது.
இப்பயிற்சி முற்றிலும் வித்தியாசமானது. குறிப்பாக எதிர்காலத்திற்கு தேவையான முக்கிய தொழில் துறையாக இது அமைந்துள்ளது.
இந்த துறையில் உள்ள வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பயிற்சி பெற்றால் மட்டும் போதாது. இந்த துறையில் சொந்தமாக வர்த்தகங்களை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு அரசாங்கத்தின் வாயிலாக கிடைக்கும் உதவி திட்டங்கள் பெரும் பயனாக இருக்கும் என தான் நம்புவதாக பிரபாகரன் கூறினார்.
இதனிடையே 3டி பயிற்சிகளை உடற்பேரு குறைந்தவர்கள் ஆசிரியர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று இலக்கை நாங்கள் கொண்டுள்ளோம்.
ஆசிரியர்கள் கற்றுக் கொள்வதன் வாயிலாக அது தமிழ்ப்பள்ளி மாணவர்களை சென்றடையும் என்று ஜேகே விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm