செய்திகள் மலேசியா
தாய்லாந்து காதலி கொலை: லாரி ஓட்டுநர் மீதான வழக்கை ஏப்ரல் 19-ஆம் தேதி குறிப்பிட நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்:
ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இவ்வாண்டு பிப்ரவரியில் செத்தியா ஆலாமிலுள்ள தங்கும் விடுதியின் 23-ஆவது மாடியிலிருந்து தள்ளிவிட்டு தனது தாய்லாந்து காதலியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லாரி ஓட்டுநருக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி புதிய வழக்கு குறிப்பிடும் தேதியாக நிர்ணயித்தது.
37 வயதான வி.நாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவஞானந்தன் ராகவா, இந்த வழக்கு குறித்த தேதி காலை 9 மணிக்கு முஹம்மத் ரெட்ஸா அசார் ரெசாலி முன்னிலையில் குறிப்பிடப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நீதிமன்றம் ஜூன் 7-ஆம் தேதியை வழக்கைக் குறிப்பிடுவதற்கு நிர்ணயித்தது.
இருப்பினும், வழக்கில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டதால் புதிய தேதி நிர்ணயிக்கப்பட்டது.
பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு 10.02 மணிக்கு, செத்தியா ஆலாமிலுள்ள ஓர் தங்கும் விடுதியிலிருந்து 32 வயதான மாவிகா லும்மையைத் தள்ளி விட்டுக் கொன்றதாக நாதன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm
சிலாங்கூரில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: அமிரூடின் ஷாரி
May 3, 2024, 1:16 pm
60%-க்கும் அதிகமான வணிகக் குற்ற இழப்புகள் அதிகரிப்பு: ரம்லி முஹம்மத் யூசோப்
May 3, 2024, 1:15 pm