நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலவச டோல் கட்டணத்தை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் நெரிசல் அதிகரிக்கலாம்

கோலாலம்பூர்:

இன்றும் நாளையும் நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இலவச டோல் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இன்று காலை 8 மணி நிலவரப்படி வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக இருப்பதாகவும் மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 1, 2 ஆகியவற்றில் இதுவரை போக்குவரத்து சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் இருப்பினும் கோலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையில் உள்ள கெந்திங் செம்பா சுரங்கப்பாதையில் நுழைவதற்கு முன்பு போக்குவரத்து சிறிது மெதுவாக நகர்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset