செய்திகள் மலேசியா
இலவச டோல் கட்டணத்தை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் நெரிசல் அதிகரிக்கலாம்
கோலாலம்பூர்:
இன்றும் நாளையும் நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இலவச டோல் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இன்று காலை 8 மணி நிலவரப்படி வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக இருப்பதாகவும் மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 1, 2 ஆகியவற்றில் இதுவரை போக்குவரத்து சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் இருப்பினும் கோலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையில் உள்ள கெந்திங் செம்பா சுரங்கப்பாதையில் நுழைவதற்கு முன்பு போக்குவரத்து சிறிது மெதுவாக நகர்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm