செய்திகள் மலேசியா
தமிழிசைச் சாரல் இசை நிகழ்ச்சி; நேர்த்தியான, திறமையான படைப்பு: டத்தோஶ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
சுகம் அறக்கட்டளையின் தமிழிசைச் சாரல் இசை நிகழ்ச்சி மிகவும் நேர்த்தியான, திறமையான படைப்பு.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.
ஓர் அற்புதமான மாபெரும் இசை நிகழ்ச்சியைக் கண்டு பிரமித்தேன்.
சுகம் கலாச்சாரம், பாரம்பரிய அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழிசைச் சாரல் இசை நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று 3 மணி நேரம் இசையோடு பயணித்தேன்.
108 கலைஞர்களின் படைப்பாக, நம் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக, தமிழ் மொழியின் அமுதமாக மிகச் சிறப்பாக நடந்தேறியது.
டாக்டர் தேவி நெத்தியார் பயிற்சியில் அவர்தம் மாணவர்களின் இந்தத் திறமை இசைத்தமிழுக்கு ஒரு வரப்பிரசாதம்.
மிக நேர்த்தியான, திறமையான படைப்பு இது. சுகம் சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.
இந்நிகழ்வில் மலேசியாவுக்கான இந்திய தூதர் பிஎன் ரெட்டி உட்பட பல பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm