நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு நம்பிக்கைக் கூட்டணியின்  தேர்தல் கேந்திரத்திற்கு எங் சீ ஹான் தலைமையேற்றார்

உலுசிலாங்கூர்:

கோல குபு பாரு இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் கேந்திரத்திற்கு சிலாங்கூர் ஜசெக செயலாளர் எங் சீ ஹான் தலைமையேற்றார்.

இதனை சிலாங்கூர் நம்பிக்கை கூட்டணி செயலாளர் டாக்டர் முகமத் கைரூடின் ஓத்மான் அறிவித்தார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் எங் சீ ஹான் தேர்தல் கேந்திர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ யீ பின், ஷாஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப் ஆகியோர் அவருக்கு உதவியாளர்களாக செயல்படவுள்ளனர்.

இவர்கள் பல முக்கிய குழுக்களை நிறுவுவார்கள்.

வேட்பாளர்கள் நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து வாக்களிக்கும் நாள் வரை அதிகாரப்பூர்வமாக இவர்கள் செயல்படுவார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset