செய்திகள் மலேசியா
புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்
சிங்கப்பூர்:
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒரு மணி நேரத்தில் மீண்டும் சிட்னிக்குத் திரும்பியுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட கோளாற்றால் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
SQ232 விமானச் சேவை உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11 மணிக்குச் சிட்னியிலிருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்குச் சிங்கப்பூரில் தரையிறங்க வேண்டியிருந்தது.
ஆனால் அது பிற்பகல் சுமார் 12.45 மணிக்கு மீண்டும் சிட்னிக்குத் திரும்பியதாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
விமானத்தில் என்ன கோளாறு ஏற்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.
பழுதுப் பணிகளுக்குப் பிறகு மதியம் 4.15 மணியளவில் விமானம் சிட்னியிலிருந்து புறப்பட்டது.
அது நேற்றிரவு 10.24 மணிக்குச் சிங்கப்பூரில் தரையிறங்கியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm