செய்திகள் மலேசியா
சூதாட்ட மையத்தில் சண்டை: 4 பேர் கைது
குவாந்தான்:
கெந்திங்மலை சூதாட்ட மையத்தில் இரண்டு குழுக்கள் இடையில் நடந்த சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் நான்கு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனை பெந்தோங் போலீஸ் தலைவர் ஜைஹாம் முகமது கஹர் கூறினார்.
23 முதல் 50 வயதுக்குட்பட்ட சுமார் 10 உள்ளூர் ஆடவர்களூக்கு இடையிலான சண்டை தொடர்பில் போலீசுக்கு அதிகாலை 4 மணியளவில் தகவல் கிடைத்தது.
சூதாட்ட மையத்தில் இருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட தவறான புரிதலே சண்டைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு சந்தேக நபர்களும் ஏப்ரல் 7 முதல் 8 வரை இரண்டு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டம் பிரிவு 147ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm