நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்ரோல் நிலையத்திற்கு முன் கைகலப்பில் ஈடுபட்ட ஆடவர் கைது 

இஸ்கண்டார் புத்ரி: 

பெட்ரோல் நிலையத்திற்கு முன் கைகலப்பில் ஈடுபட்ட ஆடவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட அவ்வாடவர் ஆண்,பெண் இருவரிடமும் கைகலப்பில் ஈடுபட்டு கடுமையாக நடந்துக்கொண்டதாக காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. 

பாதிக்கப்பட்ட நபர் அளித்த போலீஸ் புகாரின் அடிப்படையில் 35 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனை இஸ்கண்டார் புத்ரி மாவட்ட இடைக்கால காவல்துறை தலைவர் சூப்ரிடென்டன் இப்ராஹிம் மாட் சோம் உறுதிப்படுத்தினார். 

தமது கணவரால் என்னுடைய நண்பர் தாக்கப்பட்டார் என்று அந்த போலீஸ் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. பொறாமை காரணமாக இந்த கைகலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset