நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவை விட இந்திய சமுதாயத்திற்கு பெரிய பிரச்சினைகள் உள்ளது: பிரதமர் கவனிக்க வேண்டும்

கோலாலம்பூர்:

நாட்டில் மித்ராவை விட இந்திய சமுதாயத்திற்கு பெரிய பிரச்சினைகள் உள்ளது.

அதனை பிரதமர் கவனிக்க வேண்டும் என்று மலேசிய தமிழர் தன்மான சிந்தனை இயக்கம் இதனை கூறியது.

நாட்டில் மித்ரா தொடர்பான பிரச்சினை தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.

ஆனால் மித்ராவை விட இந்திய சமுதாயத்திற்கு பல பிரச்சினைகள் உள்ளது.

அதன் அடிப்படையில் தான் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரை சந்திக்க விருந்தோம். ஆனால் இறுதி நேரத்தில் அந்த சந்திப்பு நடக்கவில்லை.

அதேவேளையில் எங்களின் கோரிக்கை குறித்து பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.

இந்திய சமுதாயம் மற்ற சமூகங்களுக்கு ஈடாக வர வேண்டும் என்றால் அதற்கு தனி அமைச்சும் மானியமும் ஒதுக்கப்பட வேண்டும்.

மேலும் அமைச்சரவையின் கீழ் சிறப்பு குழு அமைக்க வேண்டும். அதில் அனைத்து தரப்பினரும் இடம்பெற வேண்டும்.

தற்போது பிரதமரை சந்திப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆகையால் அவரின் கீழ் பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும்.

அப்பிரதிநிதி மக்கள் உட்பட அனைத்து தரப்பினருடன் நல்லதொரு உறவை கொண்டிருக்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறை மாபெரும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

அந்தக் கூட்டத்தில் சமுதாயத்தின் மேம்பாட்டு திட்டங்களின் நிலவரம் குறித்து விவாதித்து முடிவு செய்ய வேண்டும்.

இந்திய சமுதாயம் மிகப் பெரிய நம்பிக்கையுடன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தந்து வருகிறது.

அந்த நம்பிக்கை பாலாகி விடக் கூடாது என்று அச்சங்கத்தின் துணைத் தலைவர் மாசிலாமணி கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset