நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விடிஆர் விசா விண்ணப்பங்களுக்கான இறுதிநாள் ஏப்ரல் 21-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

புத்ராஜெயா: 

அந்நியத் தொழிலாளர்களின்  விடிஆர் விசாவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். 

இந்த விசாவுக்கான விண்ணப்ப காலக்கெடுவை ஏப்ரல் 21 வரை நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

இதுவரை விண்ணப்பங்களுக்கான ஒதுக்கீடு இருப்பதால் இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

விண்ணப்ப காலத்தின் முடிவில் கணினியில் விசாவுக்கு விண்ணப்பிக்கும் அகப்பக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாலும் இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset