நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய செயற்கை காலைப் பெற பாலச்சந்திரனுக்கு உதவுங்கள்

கோலாலம்பூர்:

என் மகன் செயற்கைக் கால்களை நம்பியிருந்தாலும் எல்லோரையும் போல சாதாரண மனிதனாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

பாலச்சந்திரனின் தாயார் 51 வயதான ஆர்.பி. மகேஸ்வரி கூறினார்.

அந்த 2021ல் குடல் அழற்சி தொற்று காரணமாக  18 வயதான என் மகனின் கால் முழங்காலுக்குக் கீழே துண்டிக்கப்பட்டது.

அதன் பின் அவர் செயற்கை காலை பயன்படுத்தி வருகிறார். தற்போதுள்ள செயற்கைக் கால் சேதமடைந்துள்ளது.

இதனால் ஐந்து உடன்பிறப்புகளில் இளையவருக்கு தற்போது புதிய செயற்கைக் கால் தேவைப்படுவதாக தனித்து வாழும் தாயான அவர்  கூறினார்.

சேதமடைந்து துருப்பிடித்திருப்பதைத் தவிர, மகனின் வளர்ச்சியின் காரணமாக இந்த செயற்கைக் காலின் அளவும் பொரிதாகி உள்ளது.

இது செயற்கைக் காலை அணிவதில் அவருக்கு மிகவும் வசதியாக இல்லை.

அதன் காரணமாக பாலச்சந்தனுக்கு புதிய செயற்கை கால் தேவைப்படுகிறது.

என் மகன் செயற்கைக் காலைச் சார்ந்திருந்தாலும், பிற்காலத்தில் பணித் துறையில் நுழையும்போது எல்லோரையும் போல ஒரு சாதாரண மனிதனாக இருப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.

பாலச்சந்திரனுக்கு உதவ விரும்புவார் Media Prima-NSTPயின் மனிதநேய திட்டத்திற்கு Bank Muamalat 14010008842718 அல்லது Maybank 514105323170 ஆகிய வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset