நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் தொடர்பின் போது பெண்ணால் கத்தியால் குத்தப்பட்ட ஆடவர் மரணம்

கோலகிராய்:

பாலியல் தொடர்பின் போது ஒரு பெண்ணால் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படும் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் கிளந்தான், கோல கிராயில் உள்ள பொதுக் கழிப்பறையின் முன் நிகழ்ந்தது என்று கிளந்தான் போலீஸ் தலைவர் முகமத் ஷாகி ஹரூண் கூறினார்.

அடிவயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் சம்பந்தப்பட்ட ஆடவர் அக்கழிப்பறையின் முன் இறந்து கிடந்தார்.

எவ்வாறாயினும், சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இரத்தத்தின் தடயங்கள் எதுவும் காணப்படவில்லை.

உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

வயிற்றுப் பகுதியில் குத்தப்பட்ட காயத்தால் வயிற்றுக்குள் ஊடுருவி, குடலை தாக்கியதே மரணத்திற்குக் காரணம் என்று மருத்துவர் உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பில் 28 வயது பெண்ணை போலீசார் கைது செய்ததன. அவரிடம் இருந்து காய்கறி வெட்டும் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்விவகாரம் குறித்து போலீசார் தொடர் விசாரணைகளை நடத்தி வருதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset