நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அக்மால் வாளுடன் வெளியிட்ட புகைப்படம்; புகார் ஏதுமில்லை: ஐஜிபி

கோலால்லம்பூர்:

அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் டாக்டர் அக்மால் சாலே தனது முகநூலில் ஜப்பானிய பாரம்பரிய வாளைப் பிடித்துக் கொண்டிருக்கும் படம் இடம்பெற்றது தொடர்பாக அவருக்கு எதிராக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.

தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை உறுதிப்படுத்தினார்.

மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினர் ஏன் தேசத்துரோக விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறித்து செனட்டர் டி லியான் கெரின் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்திற்கு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.

புகாரளிக்கப்பட்டால் மட்டுமே போலீசார் விசாரணையைத் தொடங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset