செய்திகள் மலேசியா
பொருட்களின் விலையை கண்காணிக்க அனைத்து அமைச்சர்களும் களத்தில் இறங்க பிரதமர் உத்தரவு: ஃபாஹ்மி
புத்ராஜெயா:
சந்தையில் உள்ள பொருட்களின் விலை குறித்து ஆய்வு செய்ய அனைத்து அமைச்சர்களும் களத்தில் இறங்க வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக ஒற்றுமை அமைச்சின் செய்தி தொடர்பாளர் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமரால் இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டது.
பிரதமர் வலியுறுத்தல் என்னவென்றால், பொருட்களின் விலை அல்லது சந்தையில் உள்ள பொருட்களின் அளவு தொடர்பான பிரச்சினைகள் உட்பட, அமைச்சர்கள் களத்திற்குச் செல்ல அதிக நேரம் செலவிட வேண்டும்.
இது அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் தொடரில் பிரதமருக்கு கிடைத்த எதிர் வினைகளின் தொடர்ச்சியாகும்.
மேலும் பெருநாள் கொண்டாடுவதற்கு முன்பும் இந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று ஃபாஹ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm