செய்திகள் மலேசியா
பீடோர் கேகே சூப்பர்மார்ட்டில் பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல்: 7 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது
பெட்டாலிங் ஜெயா:
கடந்த வாரம் பேராக், பீடோர் கேகே சூப்பர்மார்ட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஏழு பேரின் வாக்குமூலத்தைக் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
ஏழு பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தாப்பா மாவட்ட காவல்துறை தலைவர் முஹம்மத் நயிம் அஸ்னாவி தெரிவித்தார்.
சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைக்கு உதவுவதற்காகக் கடை ஊழியர்கள் மற்றும் மக்களிடமிருந்து இந்த வாக்குமூலம் பெறப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
சிசிடிவி காட்சிகளைத் தவிர, சம்பவம் நடந்த இடத்தில் தற்போது வேறு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இதே சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க கேகே மார்ட் பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியை அதிகப்படுத்தியுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm
சிலாங்கூரில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: அமிரூடின் ஷாரி
May 3, 2024, 1:16 pm
60%-க்கும் அதிகமான வணிகக் குற்ற இழப்புகள் அதிகரிப்பு: ரம்லி முஹம்மத் யூசோப்
May 3, 2024, 1:15 pm