செய்திகள் மலேசியா
8.4 மில்லியன் மக்கள் 2-ஆம் கட்ட எஸ்டிஆர் உதவி தொகையைப் பெறவுள்ளனர்
பெட்டாலிங் ஜெயா:
ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்கி 2-ஆம் கட்ட எஸ்டிஆர் உதவி நிதி வழங்கப்படும் என்று நிதியமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2-ஆம் கட்ட எஸ்டிஆர் உதவி நிதியை 8.4 மில்லியன் மக்கள் பெறவுள்ள நிலையில், மத்திய அரசு இதற்காக 1.5 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இதற்கு முன்னர் உதவி நிதி பெற்றவர்களும் புதியதாகப் பதிவு செய்தவர்களும் இந்த உதவி நிதியை தங்களின் வங்கிக் கணக்குகளின் மூலம் பெறுவர்.
கடந்த ஆண்டு 1.26 பில்லியன் ரிங்கிட் எஸ்டிஆர் உதவி தொகைக்கு ஒதுக்கப்பட்டதை காட்டிலும் இந்த முறை உதவி தொகை 20% அதிகரித்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த உதவி தொகையானது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைச் சமாளிக்க உதவும் என்று முன்னதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்திருந்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm