நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெங்கு ஜஃப்ருல் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்

பெட்டாலிங் ஜெயா: 

சிலாங்கூர் மாநில அம்னோவின் பொருளாளர் பதவியிலிருந்து தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் ராஜினாமா செய்துள்ளார். 

அம்மாநிலத்தில் கட்சியின் மறுமலர்ச்சிக்கு மிகவும் திறம்பட பங்களிக்கக்கூடிய நபருக்கு வழிவிடும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சிலாங்கூர் மாநில அம்னோ பொருளாளராகவும் ஒரு வருடத்திற்கு முன்பு அவர் நியமிக்கப்பட்டபோது, அக்கட்சியின் மறுமலர்ச்சிக்கு பங்களிக்க அவர் ஓர் இலக்கை நிர்ணயித்தார்.

சிலாங்கூரில் எந்த அரசியல் கட்சியும் நிறுவப்படுவது மிகவும் முக்கியம் என்றும், மாநிலத்தில் வலுவான நிலை இல்லாமல், எதிர்காலத்தில் அதை தேசியக் கட்சியாக அழைப்பது கடினம் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சருமான தெங்கு ஜப்ருல் கூறுகையில் கூறியுள்ளார். 

தற்போதைய யதார்த்தத்திற்கு ஏற்ப உறுதியுடன் ஒரு சக்திவாய்ந்த உத்தி வகுக்கப்பட வேண்டும். 

அம்னோ பிற கட்சிகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.

அதனைத் திறம்பட பங்களிக்கக்கூடிய ஒருவரால் நிரப்பப்படும் பதவியைத் தான் காலி செய்வது நல்லது என்று கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset