நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தையைக் கடத்த முயன்ற 2 வெளிநாட்டினார் கைது 

பெட்டாலிங் ஜெயா:

கிள்ளானில் சூப்பர் மார்கெட்டில் 19 மாதக் குழந்தையைக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் இரு அந்நிய நாட்டினரைக் காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர்.

இரவு 7.30 மணியளவில் குழந்தை தனது தாய் மற்றும் உறவுக்காரத் தாய் சூப்பர் மார்க்கெட்டில் எஸ்கலேட்டரில் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக வட கிள்ளான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் எஸ்.விஜயா ராவ் தெரிவித்தார். 

சூப்பர் மார்க்கெட்டில் எஸ்கலேட்டரில் சென்று கொண்டிருந்த போது இரு அந்நிய நாட்டினர் பின்னால் வந்துள்ள நிலையில் அதில் ஒருவர் திடீரென குழந்தையைத் தூக்கியப் போது குழந்தையின் தாய் கதறியதோடு தனது குழந்தையை பின்னால் இழுத்தார்.

தப்பிக்க முயன்ற அந்த இரு அந்நிய நாட்டினரைப் பொதுமக்கள் பிடித்ததாக என்று எஸ்.விஜயா ராவ் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பின்னர், அந்த இருவரும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

குற்றவியல் சட்டம் பிரிவு 363 இன் படி விசாரணைக்கு உதவ இரண்டு சந்தேக நபர்களும் மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க சுற்றுவட்டாரப் பகுதிகளில் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்குக் காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset