செய்திகள் மலேசியா
கோல குபு பாரு இடைத் தேர்தலுக்கான தேதி ஏப்ரல் 4இல் நிர்ணயிக்கப்படும்
கோலாலம்பூர்:
கோல குபு பாரு சட்டமன்றத் இடைத் தேர்தலுக்கான தேதி ஏப்ரல் 4இல் நிர்ணயிக்கப்படும்.
இதனை தேர்தல் ஆணையத்தின் தலைமை செயலாளர் இக்மல்ரூடின் இஷாக் கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் அண்மையில் காலமானார்.
இதனைத் தொடர்ந்து அத் தொகுதி காலியாகி இருப்பதை மாநில சட்டப் பேரவை தலைவர் லாவ் வெங் சான் எங்களிடம் தெரிவித்தார்.
ஆகவே காலியாக உள்ள இத் தொகுதியில் அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.
இதன் அடிப்படையில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் கனி சலேவின் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெறும்.
வேட்புமனு தாக்கல், வாக்களிக்கும் நாள் உட்பட இதர தேதிகள் அன்றைய தினம் நிர்ணயிக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm