நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆட்சியாளர்களை அவமதித்த ஆடவர் அடையாளம் காணப்பட்டார்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

ஆட்சியாளர்களை குறிப்பாக சிலாங்கூர் சுல்தானை அவமதித்த ஆடவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் இதனை உறுதிப்படுத்தினார்.

இவ்விவகாரத்தில் மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் போலீஸ்படையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இதற்கு முன் இருந்து சம்பந்தப்பட்ட ஆடவருக்கு எதிரான 20 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு உள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட ஆடவர் மிகவும் சிக்கலான நபராக விளங்குகிறார்.

ஆட்சியாளர்களை அவமதிக்கும் காணொலிகள் முகநூலில் இல்லை. டிக் டோக்கில் உள்ளது.

இருந்தாலும் இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் வலியுறுத்தி உள்ளேன்.

எனவே முகநூல் உட்பட பிற சமூக ஊடகங்கள் 3ஆர் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஒத்துழைப்பு குறித்து ஆராயப்படுகிறது என்று ஃபஹ்மி கூறினார்.

சமீபத்தில், ஆடவர் ஒருவர் சிலாங்கூர் அரச நிறுவனத்தை அவமதித்து அசிங்கமான அறிக்கைகளை வெளியிட்டு வீடியோ பதிவேற்றி இருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset