நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேகே மார்ட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸ் விசாரணையை தொடங்கியது: யுஸ்ரி

ஈப்போ:

கேகே மார்ட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணையை தொடங்கியது.

பேரா மாநில போலீஸ் தலைவர் யுஸ்ரி ஹசான் பஸ்ரி இதனை தெரிவித்தார்.

பேரா மாநிலத்தில் பீடோரின் உள்ள கேகே மார்ட் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் குற்றவியல் சட்டம் பிரிவு 427 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 

சிவப்பு லோகோவுடன் கூடிய கருப்பு நிற வாகனம் அதிகாலை 5.35 மணியளவில் கடையின் அருகே நின்றது.

ஒரு ஆடவர் வாகனத்தில் இருந்து இறங்கி, உடனடியாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறும் முன், மண்ணெண்ணெய் அடங்கிய கண்ணாடிப் போத்தல் என நம்பப்படும் ஒரு பொருளை கடைக்குள் எறிந்த சம்பவம் பதிவாகியுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset