செய்திகள் மலேசியா
ஆசிரியர் உட்பட 320 கல்வியமைச்சு ஊழியர்கள் பணி நீக்கம்: ஃபட்லினா
கோலாலம்பூர்:
ஆசிரியர்கள் உட்பட கல்வி அமைச்சின்
மொத்தம் 320 ஊழியர்கள் கடமை தவறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2019 முதல் 2023 வரை இந்த எண்ணிக்கை பதிவாகி உள்ளது என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் மக்களவையில் கூறினார்.
இந்தக் காலகட்டத்தில் பணிக்கு வராத ஊழியர்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்களிடமிருந்து 1,303 புகார்களை பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டின் இறுதி வரை, கல்வியமைச்சு பணியாளர்கள் இல்லாதது தொடர்பான துறைத் தலைவர்களிடமிருந்து மொத்தம் 1,303 புகார்களை பெற்றுள்ளது.
அந்த எண்ணிக்கையில், 320 வழக்குகள் ஒழுங்குமுறை, பொது அதிகாரிகள் நடத்தை - ஒழுக்கம் விதிமுறைகள் 1993 ஆகியவற்றின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டன.
கல்வி அமைச்ச்சில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி நெருக்கடி தொடர்பில் லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹோக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் ஃபட்லினா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm