நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாமன்சாரா பேரங்காடியில் 5 லட்சம் ரிங்கிடுடன் ப(ய)ணப் பெட்டி  

ஷாஆலம்:

டாமன்சாரா பேரங்காடியில் 5 லட்சம் ரிங்கிடுடன் பயணப் பெட்டி கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனை சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் ஓமார் கான் உறுதிப்படுத்தினார்.

டாமன்சாரா பேரங்காடியில் கார் நிறுத்துமிடத்தில் சம்பந்தப்பட்ட பெட்டியை ஒரு பாதுகாவலர் கண்டுபிடித்தார்.

காலை 8 மணிக்கு பயணப் பெட்டியை கண்டுபிடித்த 30 வயதுடைய காவலாளியிடம் இருந்து போலீசாருக்கு புகார் கிடைத்தது.

அப்பெட்டியை போலீசார்  பரிசோதித்தபோது அதில் 10, 50, 100 ரிங்கிட் நோட்டுகள் இருந்ததைக் கண்டறிந்தார்.

அப் பெட்டியில் மொத்தம் 500,000 ரிங்கிட் இருந்தது.

பணம் உண்மையானது தானா என்று தெரிந்துக் கொள்ள பேங்க் நெகாரா மலேசியாவில் சரிபார்க்கப்படும்.

பெட்டி விட்டுச் சென்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை.

இப் பணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset