செய்திகள் மலேசியா
பதவி இல்லாத போதிலும் மதிக்கும் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு துணை நிற்பேன்: டத்தோஸ்ரீ சரவணன்
பெட்டாலிங் ஜெயா:
பதவி இல்லாத போதிலும் மதிக்கும் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு
துணை நிற்பேன்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
எம்எம்ஒய்சி ஒவ்வொரு ஆண்டும் இந்த நோன்பு திறப்பு, அன்பளிப்பு வழங்கும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
இவ்வேளையில் எம்எம்ஒய்சி ஆலோசகர் முஹம்மது அஸ்ரின், தலைவர் அஸ்மி சதக்கத்துல்லாஹ் உட்பட அவர் தம் குழுவினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் இம்முயற்சி வரும் காலங்களிலும் தொடர வேண்டும்.
மனிதவள அமைச்சராக இருந்த போது இந்நிகழ்வுக்கு வந்தேன். இப்போது நான் அமைச்சராக இல்லை.
இருந்தாலும் அதே மரியாதை அன்புடன் இந்திய முஸ்லிம் மக்கள் என்னை வரவேற்று உரிய மரியாதைகளை செய்தனர்.
இத்தனை மதிப்புமிக்க சமுதாயத்திற்கு தொடர்ந்து துணை நிற்பேன். குறிப்பாக எம்எம்ஒய்சிக்கு உரிய உதவிகளை செய்வேன்.
இது எனது கடமை என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm
சிலாங்கூரில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: அமிரூடின் ஷாரி
May 3, 2024, 1:16 pm
60%-க்கும் அதிகமான வணிகக் குற்ற இழப்புகள் அதிகரிப்பு: ரம்லி முஹம்மத் யூசோப்
May 3, 2024, 1:15 pm