நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்த ஒரே தலைவர் டத்தோஸ்ரீ சரவணன்: எம்எம்ஒய்சி

பெட்டாலிங்ஜெயா:

இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்த ஒரே தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தான்.

அவரின் சேவை இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு என்றென்றும் தேவை என்று எம்எம்ஒய்சி ஆலோசகர் முஹம்மத் அஸ்ரின் கூறினார்.

மஇகா துணைத் தலைவரான டத்தோஸ்ரீ  சரவணன் மனிதவள அமைச்சராக இருந்த காலக்கட்டம் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு பொற்காலமாகும்.

அக் காலக்கட்டத்தில் சமுதாயத்தின் தேவைகள் அனைத்தும் அவரால் பூர்த்தி செய்யப்பட்டது.

குறிப்பாக எம்எம்ஒய்சிக்கு பெரும் அளவில் ஆதரவுகளை வழங்கினார்.

இப்போது அவரில் பதவில் இல்லை. இருந்தாலும் அவரின் சேவை இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு தேவைப்படுகிறது.

இதுவே எம்எம்ஒய்சியின் கோரிக்கை என்று முஹம்மது அஸ்ரின் கூறினார்.

எம்எம்ஒய்சி 18ஆவது ஆண்டாக நோன்பு திறப்பு, அன்பளிப்பு வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று கிட்டத்தட்ட 520 பேருக்கு அன்பளிப்புகள் வழங்கப்படவுள்ளது.

பெருநாள் காலங்களில் வசதிக் குறைந்த மக்கள், தனித்து வாழும் தாய்மார்கள், அன்பு இல்லக் குழந்தைகளுக்கு உதவ வேண்டும்  என்பதே இதன் நோக்கம் என்று முஹம்மது அஸ்ரின் கூறினார்.

முன்னதாக மலேசிய முஸிலிம் இளைஞர்கள் மன்றத்தின் தலைவர் முஹம்மது அஸ்மி அனைவரையும வரவேற்றார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset