நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 8 சொகுசு கார்களை எம்ஏசிசி பறிமுதல் செய்தது

கோலாலம்பூர்:

ஆறு மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 8 சொகுசு கார்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி பறிமுதல் செய்துள்ளது.

இக் கார்கள் நாட்டிற்குள் மது, சிகரெட்டுகளை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபருக்குச் சொந்தமானதாகும்.

இரண்டு லம்போர்கினி, ஒரு லெக்ஸஸ், ஒரு மெர்சிடிஸ் பென்ஸ், ஒரு பிஎம்டபிள்யூ, ஒரு வோல்வோ, இரண்டு டொயோட்டா ஆகியவை அந்த கார்களாகும்.

கடந்த வாரத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டதாக எம்ஏசிசி வட்டாரம் தெரிவித்துள்ளது.

பிரிவு, உள்நாட்டு வருவாய் வாரியம் மற்றும் பேங்க் நெகாரா மலேசியா ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வாகனங்கள் நிறுவன உரிமையாளர்களிடமிருந்தும், அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் இடைத்தரகர்களிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset