நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காதலியால் கத்திக் குத்துக்கு ஆளான காதலன் மரணம் பொறாமை காரணம்: போலீஸ்

கோல லங்காட் -

காதலியால் கத்திக் குத்துக்கு ஆளான காதலன் (பகுதி நேர புகைப்படக் கலைஞர்) மரணமடைந்தான்.

இதனை கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ரிட்வான் உறுதிப்படுத்தினார்.

பண்டார் ரிம்பாயூவில் நடந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆடவன் சைபர்ஜெயா மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

ஒரு நோயாளி மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காலை 9.41 மணிக்கு மருத்துவரிடம் இருந்து தகவல் கிடைத்தது.

புகார்தாரர் 30 நிமிடங்களுக்கு சிபிஆர் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அச்சிகிச்சை அவருக்கு எந்த பயனும் அளிக்கவில்லை. 

 26 வயதான ஆடவருக்கு  இடது மணிக்கட்டு இடது காலில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது.

இதனால் அவ்வாடவம் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆடவனின் காதலியை மருத்துவமனை வளாகத்தில் போலீசார் கைது செய்தனர்.

26 வயதான அப்பெண் முன்னாள் மருத்துவ மாணவி. அவருக்கு எந்த முன் குற்றப் பதிவும் இல்லை. மேலும் அவர் பகுதி நேர மாடலாக பணி புரிந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

காதலன் தனக்கு துரோகம் செய்ததாக சந்தேக நபர் நம்பியதால் பொறாமை தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset