நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புரட்சி இயக்கத்தின் முதலாளி திட்டம்  கட்சி பேதங்களை களைந்து கைகோர்ப்போம்: கணபதிராவ்

கோலாலம்பூர்:

புரட்சி இயக்கத்தின் முதலாளி திட்டத்தில் கட்சி பேதங்களை களைந்து அனைவரும் கைகோர்க வேண்டும்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் இதனை வலியுறுத்தினார்.

புரட்சி இயக்கத்தின் முதலாளி நிகழ்வு வரும் மார்ச் 30ஆம் தேதி காலை முதல் மாலை வரை கிள்ளான் ஹம்சா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வர்த்தகத்தில் ஈடுபட விரும்பும் இந்தியர்களுக்கு வழிகாட்டுவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

வர்த்தகம் தொடர்பான அமைச்சுகள், இலாகாக்கள், நிதியுதவி, கடனுதவி வழங்கும் இலாகாக்கள் உட்பட அனைத்தும் ஒரு கூரையிம் கீழ் இணையவுள்ளன.

குறிப்பாக மாலை 6 மணிக்கு உச்சக்கட்ட நிகழ்வாக தலைவர்களின் உரைகள், அங்கீகரிக்கும் நிகழ்வு, விருது வழங்குவது உட்பட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளது என்று புரட்சி இயக்கத்தின் தலைவர் உமா காந்தன் கூறினார்.

இந்திய சமுதாயத்திடையே பொருளாதார உருமாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் புரட்சி இயக்கம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

கிள்ளான் நாடாளுமன்ற தொகுதி ஆதரவில் இந்நிகழ்வு நடந்தாலும் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் இந்நிகழ்வுக்காக ஒன்றினைய வேண்டும். இது தான் என்னுடைய விருப்பம்.

ஆகவே இந்நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset