செய்திகள் மலேசியா
பிரதமர் மெல்பர்ன் மாணவர்களிடம் நேர்மறையான மாற்றம் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்
மெல்பர்ன்:
தனது அதிகாரப்பூர்வ பயணமாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.
இந்நிலையில், அறிவு, ஞானம், நல்ல மதிப்புகள் மற்றும் நெறிமுறை நடத்தை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த தனது கருத்துக்களை அங்குள்ள இணை கல்வி இஸ்லாமிய பள்ளி மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சுயமாகத் தொடங்குதல், தனிப்பட்ட வளர்ச்சிக்காக வாதிடும் இஸ்லாமிய போதனைகளைப் பின்பற்றுதல் மற்றும் பரந்த சமூக மாற்றத்திற்கான படிகளில் தார்மீக வலிமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் தலைவர்கள் நீதி, சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
திறமையான தலைமையின் அடித்தளமாக, சுய முன்னேற்றம் மற்றும் அறிவைப் பெறுவதற்கான பயணத்தை இளம் தலைமுறையினர் மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்வார் அறிவுறுத்தினார்.
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதில் முக்கியமான நல்ல பண்புகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
பாலஸ்தீன மோதல்கள் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் கூறினார்.
உலகளவில் அமைதி மற்றும் நீதிக்காக வாதிடும் மலேசியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அவர் தனது உரையின் மூலம், அல்-தக்வா கல்லூரியின் மாணவர்களை ஒழுக்கத்தைப் பேணவும், அமைதி, பாதுகாப்பு மற்றும் நீதியின் கொள்கைகளை உள்ளடக்கியிருக்கவும் கேட்டுக் கொண்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm