செய்திகள் மலேசியா
17 மில்லியன் தொழிலாளர்களில் 40% பேர் EPF சந்தாதாரர்களாக இல்லை
கோலாலம்பூர்:
நாட்டில் உள்ள 17 மில்லியன் தொழிலாளர்களில் 40% பேர் EPF சந்தாதாரர்களாக இல்லை.
இதனை ஈபிஎப் தலைமை நிர்வாக இயக்குநர் அஹ்மத் ஜூர்கர்னைன் ஓன் கூறினார்.
நாட்டில் 17 மில்லியன் தொழிலாளர்களில் 60% அல்லது 10.2 மில்லியன் பேர் மட்டுமே ஈபிஎப்பில் சந்தாதாரர்களாக உள்ளனர்.
இதில் 40 சதவீத பேர் ஈபிஎப் சந்தாதாரர்களாக இல்லை. இத்தனை பேர் பதிவு செய்யாமல் இருப்பது பெரும் கவலைக்குரியது.
உலக சராசரியான 68% உடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கையும் குறைவாகத் தான் உள்ளது.
ஈபிஎப் தரவுகளின்படி தாய்லாந்தில் 49% தொழிலாளர்களும், வியட்நாமில் 43% பணியாளர்களும் மட்டுமே பாதுகாக்கப்படுகிறார்கள்.
பாதுகாக்கப்படாத பெரும்பாலான பணியாளர்கள் முறைசாரா துறையில் உள்ளவர்கள்.
ஃப்ரீலான்ஸர்கள், கிக் தொழிலாளர்கள் போன்ற சுயதொழில் செய்பவர்கள் இதில் உட்படுகிறார்கள்.
குறைந்தபட்ச ஊதியமாக 1,500 ரிங்கிட்ட சம்பாதிக்கும் ஊழியர், 3% வருடாந்திர சம்பள உயர்வுடன் 55 வயதை அடையும் போது 479,000 ரிங்கிட்டை சேமிக்க முடியும் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm