நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரணிகளுக்கு அனுமதி தேவையில்லை: போலீஸ்படைக்கு மரியா சின் அறிவுறுத்து

கோலாலம்பூர்:

பேரணிகளுக்கு இனி அனுமதி தேவையில்லை என உள்துறை அமைச்சு, ஐஜிபி டான்ஶ்ரீ ரஸாருதீன் ஹுசைன்  போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும்.

இதனை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மரியா சின் அப்துல்லாஹ் வலியுறுத்தினார்.

அமைதியான சட்டசபை சட்டத்தின்  கீழ், ஏற்பாட்டாளர்கள் ஒரு கூட்டத்தை நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு பொறுப்பான போலீஸ் அதிகாரிக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

இப் பேரணியை நிராகரிக்க போலீஸ்படைக்கு இச் சட்டதின் கீழ் அதிகாரம் இல்லை.

போலீஸ் அனுமதி தேவை என்பது இச்சட்டத்தின்கீழ் இனி பொருந்தாது என்பதை வலியுறுத்த வேண்டும்.

போலீஸ்படையினர் இந்தச் சட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது மரியா சின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset