செய்திகள் மலேசியா
பெர்சத்து இடைத்தேர்தலுக்கு கட்டாயப்படுத்தினால் எங்களிடம் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்: ஜாஹித்
பாகான் டத்தோ:
பெர்சத்து இடைத்தேர்தலுக்கு கட்டாயப்படுத்தினால் எங்களிடம் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்.
தேசிய முன்னணி, அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
தற்போது ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தொகுதிகளை காலி செய்ய வேண்டும் என பெர்சத்து கட்சி அறிவித்துள்ளது.
இதன் மூலம் இடைத் தேர்தலுக்கு பெர்சத்து கட்சி இடைத் தேர்தலுக்கு கட்டாயப்படுத்தி வருகிறது.
ஆகவே அவர்கள் வைத்திருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெறக்கூடிய இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அம்னோ வழங்கும் என்று துணைப் பிரதமருமான அவர் கூறினார்.
கோலா கங்சார், குவா முசாங், லாபுவான், ஜெலி, புக்கிட் கந்தாங் மற்றும் தஞ்சோங் கராங் ஆகிய இடங்கள் அனைத்தும் பாரம்பரியமாக முந்தைய பொதுத் தேர்தல்களில் அம்னோவின் வேட்பாளர்களால் போட்டியிட்டவை.
ஆகவே இந்த இடங்களை எப்போதும் அம்னோ வைத்திருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm