செய்திகள் மலேசியா
ரமலான் நோன்புப் பிறை மார்ச் 10இல் பார்க்கப்படும்
கோலாலம்பூர்:
மலேசியா முஸ்லிம்களுக்கு நோன்பு தொடங்கும் தேதியை முடிவு செய்ய ரமலான் மாத பிறை ஹிஜ்ரி 29 ஷாபான் 1445, அதாவது மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை மாலை பார்க்கப்படும்.
அரச முத்திரை காப்பாளர்கள் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
நோன்பு தொடங்கும் தேதியை ருக்யா, ஹிஸாப் அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கும் வழி என்று ஆட்சியாளர்களின் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.
அரச முத்திரை காப்பாளர் வானொலி, தொலைக்காட்சி மூலம் நோன்பு தொடங்கும் தேதியை அறிவிப்பார்.
மலாக்கா ஃபலாக் அல் - கவாரிஸ்மி வளாகம், கம்போங் பாலிக் பத்து, தஞ்சோங் பிடாரா, ஜொகூர் பொந்தியான் கெச்சில் ஆகிய 29 இடங்களில் அன்றைய தினம் மாலை ரமலான் மாத பிறையை காண சம்பந்தப்பட்ட குழுக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm