நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாழும்போதே தன்னை பற்றி உண்மை தன்மையுடன் எழுத தனி துணிச்சல் தேவை: டத்தோஶ்ரீ சரவணன்

திருச்சி:

வாழும்போதே தன்னை பற்றி உண்மை தன்மையுடன் எழுதுவதற்கு தனி துணிச்சல் தேவை.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இதனை தெரிவித்தார்.

காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, வள்ளலாரின் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வரும் பழ.கருப்பையாவின்  இப்படித்தான் உருவானேன் நூலை இன்று காரைக்குடியில் வெளியீடு செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. 

வாழும்போதே தன்னைப்பற்றி எழுதுவது பெரிதல்ல. 

அதில் உண்மைத்தன்மையும், உள்ளதை உள்ளபடி எழுதும் தைரியமும் இருக்க வேண்டும். 

அதை நிறைவாகச் செய்துள்ளார்  பழ.கருப்பையா.

பணம், பொருள், இளமை, இளமைக்கே உண்டான மிடுக்கு அத்தனையும் இருந்தும் அரசியலுக்கு வருவதற்கு ஒரு பெரிய மனமும், தைரியமும் தேவை. 

அதற்காகவே அவரது வாழ்க்கைப் பயணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset