நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திட்டமிட்டப்படி நாளை பேரணி; நோட்டீஸ் போலீசாரிடம் ஒப்படைப்பு: பெர்சே

கோலாலம்பூர்:

நாளைய பேரணி தொடர்பான நோட்டீஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பெர்சே தலைவர் பைசால் ஹஜிஸ் கூறினார்.

100 சதவீத சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாளை பாராளுமன்றத்திற்கு அணிவகுக்கு செல்ல பெர்சே திட்டமிட்டுள்ளது.

இப்பேரணி தொடர்பில் அமைதிப் பேரவைச் சட்டம் 2012-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,

தலைநகர் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் இந்த நோட்டீஸ் சமர்பிக்கப்பட்டது.

ஆகவே நாளைய பேரணிக்கு போலீஸ்படையின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உத்தரவாதத்திற்காக நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன் என பைசால் ஹஜிஸ் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset