செய்திகள் மலேசியா
பேரணிக்கு திட்டமிட்டுள்ள பெர்சே விதிமுறைகளை பின்பற்றவில்லை: கேஎல் போலிஸ் தலைவர் அலாவூதீன்
கோலாலம்பூர்:
சீர்திருத்தங்களைக் கோரி செவ்வாய்கிழமை நடைபெறும் பெர்சே கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்.
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அலாவூதின் அப்துல் மஜித் பொதுமக்களுக்கு இதனை அறிவுறுத்தினார்.
பேரணி நடத்தப்படுவது குறித்த ஏற்பாட்டாளர்கள் 10 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்க வேண்டும்.
ஆனால், இது நாள் வரை அப்படிப்பட்ட முன் அறிவிப்புகளை நாங்கள் பெறவில்லை.
ஆக அமைதிப் பேரணி சட்டம் 2012ன் பிரிவு 9 (1)ன் கீழ் உள்ள விதிமுறைகளை பேரணி ஏற்பாட்டாளர்கள் பின்பற்றவில்லை.
ஆகவே, இந்தப் பேரணியில் கலந்து கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm